கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோட்டையண்ணன் கோவில் தெருவில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை தெரு நாய்கள் விரட்டுவது, தெருவில் நடந்து செல்பவர்கள், தெருவில் விளையாடும் குழந்தைகளை நாய்கள் கடிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தெருவில் வீட்டின் முன்பு 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த தெரு நாய் குழந்தையை கடிக்க பாய்ந்தது. இதனை அருகில் இருந்த பெண் ஒருவர் பார்த்து நாயை விரட்டியதால் குழந்தை கடி படாமல் தப்பியது. இதே நாய் பலரையும் கடித்துள்ளதாக கூறும் பொதுமக்கள், தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது சிறுமியை தெரு நாய் கடிக்க வரும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
