உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்ப தகராறில் கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் 100 ரூபாய் பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, மது அருந்திவிட்டு கணவர் அவமானப்படுத்தியதாக தெரிகிறது. இனால் ஆத்திரமடைந்த மனைவி, தூங்கிய கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக வாக்குமூலம்தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
