மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டக்குடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று, உடலை எரித்த சாம்பலை கிணற்றில் கரைத்த கொடூர கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபாகரனுக்கும், கார்த்திகாவுக்கும் திருமணமாகி 3 வயது குழந்தை உள்ள நிலையில், நடத்தை தொடர்பாக அடிக்கடி ஏற்படும் பிரச்னையால் தாய் வீட்டுக்கு கார்த்திகா சென்றுள்ளார். சமாதானம் பேசி மனைவியை அழைத்து வந்த கணவன், வயலில் வைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
