சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே தாத்தாவை கல்லால் அடித்துக் கொலை செய்த இரு பேரன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டித்து அடித்ததால் சின்னத்தம்பி (70) என்ற முதியவரை, அவரது 12 வயது பேரன்கள் இருவரும், கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். சிறார்கள் இருவரையும் வீரகனூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
