கேரளம்: வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பியவ பெண் ஒருவர் தான் சந்தித்த திகில் தருணங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “ஓடவே முடியவில்லை. திரும்பிப் பார்த்தபோது மண் சரிவு எங்கள் அருகே வந்துவிட்டது. அந்த நேரத்தில் சாலையில் நின்றிருந்த லாரிதான் எங்களுக்கு அரணாக இருந்து உயிரைக் காப்பாற்றியது” என்று அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். அந்த சம்பவத்தின் நினைவுகள் இன்னும் மறக்க முடியாததாக இருப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறினர்.
