மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பரூய்பூர் பகுதியில் 11 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியான பிரவாஷ் மோந்தல்என்பவரை போலீசார் அதிரடியாக என்கவுண்டர் செய்துள்ளனர். ஜூலை 8, 2026 அன்று அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில், குற்ற இடமறுவடிவமைப்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தப்ப முயன்ற குற்றவாளியை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை ஏற்கனவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் அடித்துக் கொன்ற நிலையில், தற்போது பிரதான குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
