திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட குறுவை நெல், நிலக்கடலை, சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், மரவள்ளி, மஞ்சள் ஆகிய பயிர்களை, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். திட்டம் மற்றும் பிரீமியம் தொகை குறித்த விவரங்களுக்கு, அருகில் உள்ள வட்டார வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
