திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மேயர் அன்பழகன் பேசுகையில், “மாமன்ற உறுப்பினர்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆகஸ்டு முதல் வாரத்தில் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்தார்.
