புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாகப் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நச்சு வாயுவைச் சுவாசித்த அங்கிருந்த பணியாளர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அதிர்ச்சித் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
