மும்பையில் பத்து வயது சிறுமியின் நுரையீரலில் கடந்த ஏழு ஆண்டுகளாகச் சிக்கியிருந்த பேனா மூடியை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். நீண்ட நாட்களாக ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுமிக்குப் பரிசோதனை செய்ததுள்ளனர். அப்போது இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. தொடர் சுவாச பிரச்சினைகளை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
