திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தம் இல்லாததால் வெளியூர் செல்வோர் தங்களது இருசக்கர வாகனங்களைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால், துறையூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாத நிலை உள்ளது. போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
