கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூர் நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த 22 வயதான ஜமுனா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஓடும் ரயிலிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவ வலியால் துடித்த அவருக்குச் சக பயணிகள் சமயோசிதமாகச் செயல்பட்டுப் பிரசவம் பார்க்க உதவினர். பின்னர் ரயில் காட்பாடி இரயில் நிலையத்தை வந்தடைந்ததும், தாயும் சேயும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
