சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவது அரசியல் ஆகாது என்றும், CM விஜய்யை போல தங்களுக்கு நடிக்க தெரியாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். எதுவுமே தெரியாத விஜய் முதல்வராக ஆசைப்படும்போது, மக்கள் மனதை படிக்க தெரிந்த எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகா வரவேண்டாம் என அம்மாநில முதல்வரே கூறும் அளவிற்கு ஒரு பலவீனமான முதல்வரையே தமிழகம் தற்போது பெற்றுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
