நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது . இதனால் கபினி அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இ ருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டுக்கு வந்துசேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
