நடிகை யாஷிகா ஆனந்த் தனது காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். “காதல் தோல்வி காரணமாக தற்போது தனிமையில் இருக்கிறேன். இந்த நேரத்தை என்னை நானே புரிந்துகொள்ளவும், மன அமைதியை பெறவும் பயன்படுத்தி வருகிறேன். காதல் எனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. தற்போது முழு கவனத்தையும் சினிமா மற்றும் எனது வாழ்க்கை முன்னேற்றத்தில் செலுத்தி வருகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
