நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை, கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
