வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; மசோதா தொடர்பாக ஆக.6இல் உள்துறை அமைச்சரை திமுக எம்பி வில்சன் தலைமையிலான குழு சந்தித்தது. “FCRA மசோதா திரும்பப்பெற வில்சன் தலைமையிலான சிறுபான்மையினர் கூட்டு நடவடிக்கை மன்றம் முறையிட்டது” என்று கூறினார்.
