ஜப்பானின் தென் பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி டால்பின் சூறாவளி நகர்வதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூறாவளியின் வேகம் மணிக்கு 144 கி.மீ என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, 70 வயதுடைய 3 பேர் பலத்த காற்றினால் காயமடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகினாவாவில் 240 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
