ஜோத்பூர் பகுதியில் இருந்து ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு திருச்சிக்கு வந்தது. அந்த ரயிலில் ரயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ராஜஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவர் குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவரிடம் 10 கிலோ குட்கா இருப்பது தெரிந்தது. உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்திய பின், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
