ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிபிசிஐடி டிஜிபியாக பாலநாகாதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பியாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பியாக அபின் தினேஷ் மோடக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உளவுப் பிரிவு துணை ஆணையர் ராமமூர்த்தி கியூ பிரிவு சி.ஐ.டி. எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக அர்பிதா ராஜ்புத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கமாண்டோ எஸ்.பியாக ஈஸ்வரன், தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பியாக சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
