லடாக்கின் லே பகுதியில் இன்று (ஆக.13) அதிகாலை பூமிக்கு அடியில் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 5.5 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குறைந்த ஆழத்தில் ஏற்பட்டதால் பூமியின் மேற்பரப்பில் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டு, கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும், இதுவரை உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான பொருட்சேதங்களோ பதிவாகவில்லை என்றும், நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
