ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்ற அதிபர் டிரம்பின் கூற்றை ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முற்றிலும் நிராகரித்துள்ளது. அமெரிக்கா போரை முழுமையாக முடிவுக்கு கொண்டுவந்து, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது. இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து, சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நீரிணை விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
