திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த 10 பேரை மேலதிகாரிகளின் அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து லேப்டாப்புகள், வாகனங்கள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையைத் தடுக்கத் தவறிய மன்னார்குடி டவுன் காவல் ஆய்வாளர் ராஜகமலைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றித் தஞ்சாவூர் சரக டிஐஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
