சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையினரே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி செல்வது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவப்பெயரை ஏற்படுத்துவதை தவிர்க்க மண்டல ஐ.ஜி.க்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன்படி, இனி ஹெல்மெட் அணியாமல் வரும் போலீசாரின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், அவர்களுக்கு கட்டாயமாக ஒரு நாள் ‘ஆப்சென்ட்’ போட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
