நகர்ப்புறங்களில் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணிகள் தினசரி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகையப் பணிக் குழுக்களில் பாதுகாப்புப் படை வீரர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பணக் கையாளுநர்கள் இடம்பெறுவது வழக்கம். இத்தகையப் பலத்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வாகனத்திலிருந்து பணம் மாயமாவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களுக்குப் பணத்தை விநியோகிப்பதற்காகக் கொண்டுசெல்லும் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வாகனத்தில் இருந்த பணப் பெட்டிகளைச் சரிபார்த்த போது அதில் இருந்த ரூ.24 லட்சம் பணம் மாயமாகியிருப்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்துப் பெரம்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பணப் பெட்டியைப் பரிசோதித்து வழக்கைப் பதிவு செய்தனர். அத்துடன், இச்சம்பவத்தில் தொடர்புடைய பண வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர்கள் உள்ளிட்ட 4 பேரைப் பிடித்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
