தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு விசிகவினர் பிளக்ஸ் பேனரை அகற்றியதைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது, அந்த வழியாக பைக்கில் சென்ற இளைஞர் அவசரமாகச் செல்ல வேண்டும் எனக் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞர் போலீசாரைத் தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் அவரை குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
