டில்லி: மேகமலை புலிகள் சரணாலயம் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இலவம் பஞ்சு தோட்டங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ரிசர்வ் வனப் பகுதிகளில் யாருக்கும் பட்டா வழங்க கூடாது என்றும் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டடங்களுக்கான மின், நீர் இணைப்புகளை துண்டியுங்கள் எனவும் தேவைப்பட்டால் துணை ராணுவப்படையை பாதுகாப்புக்கு அனுப்புவோம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
