மாநிலங்களுக்கு இடையே உளவுத் தகவல்களைப் பகிர்வதன் மூலம் போதைப்பொருளை ஒழிக்க முடியும் எனத் தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் பேசியுள்ளார். கடல்வழிப் போக்குவரத்து மற்றும் மீன்பிடித்தலில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்படத் தயார் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தொகுதி மறுவரையறையில் எந்தவொரு மாநிலத்தின் பிரதிநித்துவம் குறையக்கூடாது என மத்திய அரசு சட்டப்பூர்வ உத்தரவாதம் தர வேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது என வலியுறுத்தினார்.
