சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, கேள்விகளை திசைதிருப்பும் களமாக இருக்க கூடாது என திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும் பொறுப்புடனும் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், அளித்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றிவிட்டு முதல்வர் விஜய் அமெரிக்க அதிபராக கூட ஆகட்டும் என அவர் விமர்சித்தார்.
