சென்னை புழல் மத்திய சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலை, வசதிகள் தொடர்பாக நேரில் சென்று முதலமைச்சர் திடீர் விஜய் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தமிழக உயர் அதிகாரிகள், சிறைத் துறை அதிகாரிகளுடன் இன்று காலை சென்னை புழல் மத்திய சிறைக்குச் சென்றார் முதல்வர் விஜய். சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவு தயாரிக்கப்படும் கூடும், மருத்துவ வசதிகள் என அனைத்தையும் முதல்வர் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார்.
முதல்வர் விஜய், புழல் சிறைக்கு வந்திருக்கும் நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது
