துருக்கியில் இருந்து ஆயுதங்களை ஏற்றி சென்ற கமரூன் நாட்டின் சரக்கு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் இந்திய பெருங்கடலில் வைத்து அண்மையில் மாலுமிகளுடன் கடத்தி சென்றனர். இந்த தகவலறிந்த சோமாலிய மற்றும் துருக்கிய கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில், பண்ட்லெண்ட் மாகாண அருகே கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. இந்த மோதலின் போது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 14 கடற்கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், கப்பலில் இருந்த 6 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
