சட்டப்பேரவை விவாதத்தின்போது சௌமியா அன்புமணியின் செயல்பாடுகளை துணை சபாநாயகர் பாராட்டினார். “சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எப்படி பயன்படுத்த வேண்டும்?, தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை எப்படி எடுத்துச் சொல்வது? என்பதை உறுப்பினர் சௌமியா அன்புமணியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” என துணை சபாநாயகர் புகழாரம் சூட்டினார். மேலும், “அவர் சமூக ரீதியாக மட்டுமே பேசி வருகிறார். கட்டாயம் தவெக மூலம் தமிழ்நாட்டுக்கு மதுவிலக்கு வரும்” என்றார்.
