தவெகவுடன் கூட்டணி வைத்தது குறித்து சட்டப்பேரவையில் இன்று (ஆக.31) காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் விளக்கம் அளித்தார். “முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் நான் வெற்றி பெற வேண்டும் என உதயநிதி ஸ்டாலினை என் தொகுதிக்கு அனுப்பி என்னை வெற்றி பெற வைத்தார். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வந்துவிடக் கூடாது என ஸ்டாலின் நினைத்தார். ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காகத்தான் காங்கிரஸ், தவெகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தோம். எங்களைப் பார்த்து முதுகில் குத்திவிட்டோம் என தயவுசெய்து கூறாதீர்கள்” என்றார்.
