ஆரணியில் மதுபோதையில் பெண் ஊழியரை இளைஞர் ஒருவர் விரட்டி, விரட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லேரிப்பட்டைச் சேர்ந்த ராஜி (19), பணம் கொடுத்தால்தான் பெட்ரோல் போடுவேன் என ஊழியர் கூறியதால் ஆத்திரமடைந்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் இளைஞரை தேடி வருகின்றனர்.
