இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய இத்தாலி வரலாற்றில் தொடர்ந்து அதிக நாட்கள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2022-ல் பிரதமராக பொறுப்பேற்ற அவர், 1,413 நாட்களை நிறைவு செய்து முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் சாதனையை முறியடித்தார். இதையடுத்து பிரதமர் மோடி, தனது நண்பர் மெலோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சாதனை, இத்தாலி மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
