சென்னை-பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை கைது செய்ததற்கு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். தாமிரபரணி பாசனத்தை நம்பியுள்ள சுமார் 5,000 ஏக்கர் வாழைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளதாகக் கூறிய அவர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாபநாசம் அணையில் இருந்து 1,500 கனஅடி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
