இந்தியாவில் ஸ்விகி, ஓலா, ஸொமாட்டோ மற்றும் இ-காமர்ஸ் சார்ந்த ‘கிக்’ பணிகள் பெரும்பாலானோருக்கு முழுநேர வேலையாக மாறியுள்ளதாக ‘ஜன்பஹால்’ அமைப்பின் தேசிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இத்துறையில் 57% தொழிலாளர்கள் வாரத்திற்கு 49 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் இத்தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பணிச்சூழலை மேம்படுத்தவும் உடனடியாக சட்ட சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டுமென அந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
