கோவை மாவட்டம், சூலூரில் அடையாளம் தெரியாத நபர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குருநாதன் என்பவருக்கு சொந்தமான தகர கொட்டகையில் ஆண் சடலம் கண்டெடுப்பு; ஆடைகளின்றி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட நபர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த ஒரே மாதத்தில் 10 கொலைகள் நடந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
