விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்கு வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து வழக்கமாக ரூ.1,000 வசூலிக்கப்படும் கோவைக்குத் தற்போது ரூ.3,000 வரையிலும், கன்னியாகுமரிக்கு ரூ.6,000 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இத்தகைய கட்டணக் கொள்ளை நடப்பதாகப் பயணிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.
