தூத்துக்குடியில் வெங்கடாசலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முத்துமாரி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். தனது மகளை பார்ப்பதற்காக சென்றுவிட்டு வீடு திரும்பிய முத்துமாரி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்பகுதியில் நேற்று ஒரே நாளில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து மூதாட்டி ஒருவர் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
