சந்தையில் இருந்த பணப்புழக்கத்தை ரூ.6 லட்சம் கோடியாக இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. வங்கிகள் கையிருப்பில் இருந்த பணம் செப்.6ல் ரூ.11.6 லட்சம் கோடியாக அதிகரித்த நிலையில் பணப்புழக்கம் குறைப்பு. 30 நாட்களுக்குள் நிதிச்சந்தையில் உள்ள பணப்புழக்கத்தில் ரூ.7 லட்சம் கோடியை குறைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டது. நிதிச்சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்தால் பணவீக்கம் உயர்ந்து, விலை ஏற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதால் ஆர்பிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
