கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தின்போது தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூறியதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று (செப்.12) பேட்டியளித்த அவர், சட்டத்துறையில் தனக்கு இருந்த அனுபவத்தின் அடிப்படையில் அவ்வாறு கூறியதாகவும், மனிதாபிமான அடிப்படையில் விஜய் மீது அப்போது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
