முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம். ‘தலைநிமிர்ந்த தமிழர் தலைநிமிர்ந்த தமிழ்நாடு’ என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர். பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் சமூகநீதியில் மாநில உரிமையில் தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார் என குறிப்பிட்டுள்ளார்.
