கன்னியாகுமரியில் லாட்ஜில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த டிரைவர் செல்வராஜ் (31) போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் இருந்த பெண்ணிடம் பழகி, லாட்ஜிற்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கு 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், பெண்ணிடம் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
