தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் மற்றும் உபபொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் 300 லிட்டர் தேவைக்கு 100 லிட்டரும், மதுரையில் 180 லிட்டரும் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. ரூ.30,000-க்கு பணம் செலுத்தினால் ரூ.10,000-க்கு மட்டுமே பால் கிடைப்பதாக முகவர்கள் தெரிவிக்கின்றனர். பால் மட்டுமின்றி தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களும் கிடைக்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
