ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி அருகே முலகலசெருவு பகுதியில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற 24 வயது பாவுஜான் என்ற இளைஞர் அணையில் மூழ்கி உயிரிழந்தார். சவுடசமுத்திரம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கரைப்பதற்காக, இளைஞர்கள் ஏட்டிகட்ட தண்டா பகுதியில் உள்ள பெத்தேறு அணைக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது சிலையுடன் நீரில் இறங்கிய பாவுஜான் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
