Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓடத்துறை அருகே மீட்கப்பட்ட உடல்… திருச்சியில் சோகம்

ஓடத்துறை அருகே மீட்கப்பட்ட உடல்… திருச்சியில் சோகம்

திருச்சி கல்லுக்குழி சுப்பராயன் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் பார்த்தசாரதி (17). இவர் திருச்சி திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். இவரும், இவரது நண்பர்கள் 7 பேரும் சேர்ந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் திருச்சி ஜீயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தடுப்பணையில் காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற 3 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்ட சக மாணவர்கள் காப்பாற்றக்கோரி கூச்சலிட்டனர். அங்கு குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட 2 பேரை மீட்டனர். பார்த்தசாரதியை காப்பாற்ற முடியவில்லை.
தகவலறிந்த திருச்சி கோட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் கம்பரசம்பேட்டை தடுப்பணை பகுதியில் ரப்பர் படகு உதவியுடன் காணாமல் போன பார்த்தசாரதியை தேடி வந்தனர். இந்நிலையில் இறந்தவரின் உடல் ஓடத்துறை அருகே மீட்டனர்.

error: Content is protected !!