Skip to content

கரூர் அருகே வேன் மீது கார் மோதி விபத்து.. வேன் டிரைவர் பலி….பரபரப்பு

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆட்டையான்பரப்பு அருகே ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி அரவக்குறிச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற டாடா ஏசி வேன் மீது மோதிய விபத்தில் வேன் டிரைவர்

சரவணன் உயிழந்துள்ளார். காரில் சென்ற மூன்று பேர்கள் படுகாயத்துடன் தனியார்  ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர் இழந்த சரவணனின் உடலை கரூர் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!