Skip to content

புதிய உயர்கல்வித்துறை அமைச்சர்…….மகேஷ்க்கு வாய்ப்பு?

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால்,  அவர் பதவி இழந்தார். எனவே  உயர்கல்வித்துறை இலாகாவுக்கு  புதிய அமைச்சர் நியமிக்கப்படுவாரா, அல்லது தற்போது அமைச்சரவையில் உள்ள  ஒருவரிடம் கூடுதலாக இந்த பொறுப்பு ஒப்படைக்கப்படுமா என்பது இன்று  அல்லது நாளை அறிவிக்கப்படும். இதனை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்து கவர்னர் ரவிக்கு தெரிவிப்பார். அதன் பிறகு கவர்னர்   அந்த அறிவிப்பை வெளியிடுவார்.

பொன்முடியிடம்  உயர் கல்வி உள்ளிட்ட தொழில்கல்வி, மின்னணுவியல், அறிவியல், தொழில் நுட்பவியல் ஆகிய துறைகள்  இருந்தது.  இதில் உயர் கல்வித்துறை மட்டும் தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கொடுக்கப்படலாம் என்று  கூறப்படுகிறது.   இன்று காலையில் மகேஷ், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியதாக தெரிகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!