தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகர் மாதவராவ் நகர் பகுதியை சேர்ந்த சண்முக சரவணன். இவரது மனைவி செந்தமிழ் செல்வி (44). இவரது மகன்கள் சரத் விஷ்ணு (25) சந்துரு (23). இதில் சரத் விஷ்ணு வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சந்துரு காரைக்குடியில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
சண்முக சரவணன் கோயமுத்தூரில் கட்டிட வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டில் செந்தமிழ் செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் சண்முக சரவணன் தஞ்சாவூரில் இருந்து கோயம்புத்தூருக்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் செந்தமிழ் செல்விக்கு நீண்ட நாட்களாக உடல்நிலையில் தீராத பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் செந்தமிழ் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.